திருமயிலைச் சிங்கார வேலர் திருப்பதிகம்
11. நேருடைய வலியின்மை தாம்உணர்ந் துண்மை
நினைந்துபணி வார்களென்றே
நீயருளி னாற்போரை நீட்டித்த னை ;ஈது
நித்தம்நினை வுற்றுருகினேன் ;
12. தேருடைய நல்விழா அன்னதா னப்பெருமை
தேவாரம் ஓதுதுழனி
சிங்காத சீர்மயிலை பொங்கார்வ மோடுவளர்
சிங்கார வேல்முருகனே!
13. நின்னுடைய தந்தைமது ரைத்தலத் தேமுன்னர்
நேயமுறு வழுதிகுறையை நீக்குதற் கென்றகப் பொருள்நூலை நூற்பாக்கள்
நின்றமூ விருபதுபெற
14. மன்னுவித் தான் ;அதன் இலக்கியமி தாமென
மனங்கொளற் காகநீயோ
வாய்களவி னால்வள்ளி யம்மையை மணந்தனை ;
மகிழ்கற்பு முறையினாலே
15. துன்னுமிந் திரன்மகளை வேட்டனை; செந்தமிழ்த்
தொன்னெறியின் மாட்சிகாட்டிச்
சொற்சுவை பொ ருட்சுவையை ஆய்புலவர் துதிசெயச்
சுடரும்நின் பெருமைஎன்னே!
11. நேருடைய வலியின்மை தாம்உணர்ந் துண்மை
நினைந்துபணி வார்களென்றே
நீயருளி னாற்போரை நீட்டித்த னை ;ஈது
நித்தம்நினை வுற்றுருகினேன் ;
12. தேருடைய நல்விழா அன்னதா னப்பெருமை
தேவாரம் ஓதுதுழனி
சிங்காத சீர்மயிலை பொங்கார்வ மோடுவளர்
சிங்கார வேல்முருகனே!
13. நின்னுடைய தந்தைமது ரைத்தலத் தேமுன்னர்
நேயமுறு வழுதிகுறையை நீக்குதற் கென்றகப் பொருள்நூலை நூற்பாக்கள்
நின்றமூ விருபதுபெற
14. மன்னுவித் தான் ;அதன் இலக்கியமி தாமென
மனங்கொளற் காகநீயோ
வாய்களவி னால்வள்ளி யம்மையை மணந்தனை ;
மகிழ்கற்பு முறையினாலே
15. துன்னுமிந் திரன்மகளை வேட்டனை; செந்தமிழ்த்
தொன்னெறியின் மாட்சிகாட்டிச்
சொற்சுவை பொ ருட்சுவையை ஆய்புலவர் துதிசெயச்
சுடரும்நின் பெருமைஎன்னே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக