திருமயிலைச் சிங்கார வேலர் பதிகம்
21. ஞானமுறு முனிவரர் தமைக்குரு எனக்கொண்டு
நன்னெறியி லேசான்றவர்
நண்ணுவார்; முனிவரில் சனகாதி நால்வரை
நாயகமெய்ஞ் ஞானியரென
22. வானவரம் ஓதுவர்; கல்விகேள் விச்செல்வம்
மண்டும் அந் நால்வருக்கு
மாஞான முத்திரை காட்டியுப தேசஞ்செய்
வள்ளல்தென் முகக்கடவுளே
23. ஆனபெரு மைக்குரிய குரவனென் றெல்லாரும்
அன்புசெய் தேபணிகுவார்.;
அத்தகைய மோனகுரு உபதேச உரைகேட்க
அருள்செய்த குருபரனெனாத்
24. தேனவிலு மொழியினால் மேலோர்கள் போற்றிசெய்
தேசிகனும் நீயல்லையோ ?
சிங்காத சீர்மயிலை பொங்கார்வ மோடுவளர்
சிங்கார வேல்முருகனே !
25. பற்பல நலச்செய்கை செய்வதற் காசையென்
பால்உண்டு ; சோம்பலதனால்
பதிந்தொரு திறத்தினிற் சாதனம் புரியும்அ ப்
பாங்கிலா இழுதையேன்யான்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக