சனி, 14 மார்ச், 2015


தி

திருமயிலைச் சிங்கார வேலர் பதிகம்

36.       தேண்டியவர் நின்னருளி னால்இன்பம் ஆர்குவார்;

                    சிறியனேன் பெறக்கருதுவாய் ;

             சிங்காத சீர்மயிலை பொங்கார்வ மோடுவளர்

                      சிங்கார வேல்முருகனே !



37 .       வேடுவர் புனத்திலுரு மாறிமுனி சொற்படி

                      வியாகுல மனத்தினொடு
     
             விரைந்துசென் றேவள்ளி எம்பிராட் டிக்குமுனம்

                         வேசாறி ஏங்கிநின்று


38      . நீடுமுளம் உருகிப் பணிந்ததை நினைத்துன்றன்

                    நிகரிலாக் கருணைஎண்ணி

            நெகிழன்பர் தம்முடன் கூடிவழி பாடுசெய்

                        நியதியினை யருள்புரிகுவாய் !



39.           சாடுமலம் ஒருவிமெய்ஞ் ஞானநிலை யன்பினர்

                       தழைக்கச்செய் குமரகுருவே ,

               சங்கரன் பங்கதனில் ஒன்றிடும் புங்கவி

                           தனக்குரிய மாமதலையே ,


40.     தேடுவளம் யாவுமுற நீடுபலர் வாழ்வுபெறு

                    தெய்வநக ரென்னுமேன்மை

           சிங்காத சீர்மயிலை பொங்கார்வ மோடுவளர்

                      சிங்கார வேல்முருகனே!







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக