தி
திருமயிலைச் சிங்கார வேலர் பதிகம்
36. தேண்டியவர் நின்னருளி னால்இன்பம் ஆர்குவார்;
சிறியனேன் பெறக்கருதுவாய் ;
சிங்காத சீர்மயிலை பொங்கார்வ மோடுவளர்
சிங்கார வேல்முருகனே !
37 . வேடுவர் புனத்திலுரு மாறிமுனி சொற்படி
வியாகுல மனத்தினொடு
விரைந்துசென் றேவள்ளி எம்பிராட் டிக்குமுனம்
வேசாறி ஏங்கிநின்று
38 . நீடுமுளம் உருகிப் பணிந்ததை நினைத்துன்றன்
நிகரிலாக் கருணைஎண்ணி
நெகிழன்பர் தம்முடன் கூடிவழி பாடுசெய்
நியதியினை யருள்புரிகுவாய் !
39. சாடுமலம் ஒருவிமெய்ஞ் ஞானநிலை யன்பினர்
தழைக்கச்செய் குமரகுருவே ,
சங்கரன் பங்கதனில் ஒன்றிடும் புங்கவி
தனக்குரிய மாமதலையே ,
40. தேடுவளம் யாவுமுற நீடுபலர் வாழ்வுபெறு
தெய்வநக ரென்னுமேன்மை
சிங்காத சீர்மயிலை பொங்கார்வ மோடுவளர்
சிங்கார வேல்முருகனே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக