திருமயிலைச் சிங்கார வேலர் பதிகம்
கி.வா .ஜகந்நாதன்
உ
முருகன் துணை
காப்பு
( நேரிசை வெண்பா)
தேன் பிலிற்றும் காமயிலைச் சிங்கார வேலனுக்கு
யான் பிதற்றும் செந்தமிழ்ப்பா ஏற்றமுறத்தான் பெருக்கும் ;
நந்தா வளச் சுவையை நல்கும் ஒரு கோட்டுத்
தந்தா வளத்தின் மலர்த் தாள் .
நூல்
( ஆசிரிய விருத்தம்)
1. திருமலியும் எழில்குலவு கமலச் செழும்பதம்
சிந்தைக்கு ளேவைத்ததைத்
தியானித்து மோனத்தில் அன்பினால் அபிடேகம்
செய்துசாந் தம்குலவவே
2. உரு மலிய வைத்துப்பின் சோதியாக் கண்டெல்லை
ஒன்றுமற் றேவிரிந்த
ஓங்கார ஒளியாகி ஒலியாகி ஆனந்த
ஊற்றாகி மாறிநிற்க
3. அருமலியும் வெளியிலே நான்என்ப தற்றுநினை
அன்றியொரு பொருளற்றஅவ்
வத்துவித நன்னிலையில் ஆராத அமுதுண்
டடங்கும்வகை அருள்புரிகுவாய்
4. தெருமலியும் மாளிகை கோபுரங் கூடங்கள்
செல்வமலி நகரமாகிச்
சிங்காத சீர்மயிலை பொங்கார்வ மோடுவளர்
சிங்கார வேல்முருகனே !
5. கானக் குறத்திமுன் னேபணிந் துருகிஅவள்
கடைக்கணோக் கிற்கலந்து
காதல்மொழி பேசிமா மோகமுறு நிலையினிற்
கவன்றுநின் றாய்என்பரால்
( இன்னும் வரும்)
கி.வா .ஜகந்நாதன்
உ
முருகன் துணை
காப்பு
( நேரிசை வெண்பா)
தேன் பிலிற்றும் காமயிலைச் சிங்கார வேலனுக்கு
யான் பிதற்றும் செந்தமிழ்ப்பா ஏற்றமுறத்தான் பெருக்கும் ;
நந்தா வளச் சுவையை நல்கும் ஒரு கோட்டுத்
தந்தா வளத்தின் மலர்த் தாள் .
நூல்
( ஆசிரிய விருத்தம்)
1. திருமலியும் எழில்குலவு கமலச் செழும்பதம்
சிந்தைக்கு ளேவைத்ததைத்
தியானித்து மோனத்தில் அன்பினால் அபிடேகம்
செய்துசாந் தம்குலவவே
2. உரு மலிய வைத்துப்பின் சோதியாக் கண்டெல்லை
ஒன்றுமற் றேவிரிந்த
ஓங்கார ஒளியாகி ஒலியாகி ஆனந்த
ஊற்றாகி மாறிநிற்க
3. அருமலியும் வெளியிலே நான்என்ப தற்றுநினை
அன்றியொரு பொருளற்றஅவ்
வத்துவித நன்னிலையில் ஆராத அமுதுண்
டடங்கும்வகை அருள்புரிகுவாய்
4. தெருமலியும் மாளிகை கோபுரங் கூடங்கள்
செல்வமலி நகரமாகிச்
சிங்காத சீர்மயிலை பொங்கார்வ மோடுவளர்
சிங்கார வேல்முருகனே !
5. கானக் குறத்திமுன் னேபணிந் துருகிஅவள்
கடைக்கணோக் கிற்கலந்து
காதல்மொழி பேசிமா மோகமுறு நிலையினிற்
கவன்றுநின் றாய்என்பரால்
( இன்னும் வரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக