திருமயிலைச் சிங்கார வேலர் பதிகம்
16. தென்னைமலி பைஞ்சோலை கங்கைபுரை பொய்கைஇவை
சேர்ந்துவளம் எந்நாளுமே
சிங்காத சீர்மயிலை பொங்கார்வ மோடுவளர்
சிங்கார வேல்முருகனே!
17. தண்டமிழ்க் கேபெருமை நல்கும் பொருள்துறை
சார்அகத் திணையில்முன்னர்த்
தருகுறிஞ் சித்திணையின் மலர்நினக் குரியதாம் ;
சால்குறிஞ் சிக்கிழவனாய்
18. அண்டும்நீ வீரத்தின் வகையினைச் சொல்புறத்
தாம்திணைக ளின்முன்னதாய்
ஆர்ந்தவெட் சித்திணைக் குரியபூ வும்புனைந்
தப்புறப் பொருள்தலைவனாய்
19. மிண்டிய பெரும்புகழ் பெற்றனை ; எனிற்றமிழின்
மெய்த்தெய்வம் நீஎன்பதில்
வேறுபட் டுச்சொல்ல வகையுமுண் டோ ?உனை
வேண்டிவந் தேன்;அருளுவாய்;
20. திண்டிறல்கொள் ஏராறு தோளுடைய சேவகா;
திருஞான சம்பந்தர்சொல்
சிங்காத சீர்மயிலை பொங்கார்வ மோடுவளர்
சிங்கார வேல்முருகனே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக