திருமயிலைச் சிங்கார வேலர் பதிகம்
31. பாய்மயிலின் ஏறிஅன் பர்க்குதவ வேகமாய்ப்
பரிந்துவரு கருணைமுகிலே,
பத்தர்செயும் அன்பினுக் கொருகோடி யளவன்பு
பண்ணும்அதி சயவள்ளலே,
32. சேய்மலி எழிற்குமரன் என்னிலஞ் சியமெனச்
செப்பிஉமை கொஞ்சுமுருகா,
சிங்காத சீர்மயிலை பொங்கார்வ மோடுவளர்
சிங்கார வேல்முருகனே !
33. ஆண்டவன் அருள்கிலன் , அந்தோ அவன்குருடன்,
அடியனேன் குறைகண்டிலன்,
ஆர்எனைத் தாங்குவார் என்றே குறைசொல்லும்
ஆதர் உண் மைஅறிகிலார் ;
34. காண்டகைய தனுகரண புவனபோ கந்தந்து
காசினியில் வாழவைத்த
கருணையினை எண்ணில்யாம் செய்கின்ற கைம்மாறு
கடுகளவு தானுமுண்டோ?
35. வேண்டிய வரம்தரற் கெஞ்ஞான்றும் நீயுளாய்;
மீதூர்ந்த பத்திகொண்டு
மெய்ம்மயிர் பொடிப்பவிழி நீரருவி காலமனம்
வெந்துருக வேசாறியே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக